Tuesday, May 24, 2016

‘ஆலோ’, ‘டியோ’ கூகுள் அதிரடி!


ஃபேஸ்புக், வாட்ஸ் அப்க்கு போட்டியாக ‘ஆலோ’, ‘டியோ’ என இரு ஆப்களை அறிமுகப்படுத்தியுள்ளது கூகுள் நிறுவனம். இரண்டே ஆப்கள் ஃபேஸ்புக், வாட்ஸ் அப் என வைத்துக்கொண்டு மொத்த டெக்னாலஜி உலகையும் ஆண்டுகொண்டிருக்கிறார் சூக்கர்பெர்க். ஒரு காலத்தில் உலகையே வியக்கவைத்துக் கொண்டிருந்த கூகுளால் சும்மா இருக்க முடியவில்லை.

மெசேஜிங் ஆப்பான ‘ஆலோ’வில் ,தற்போது வாட்ஸ் அப்பில் அப்டேட் ஆகியிருக்கும் மெசேஜ்களை பாதுகாக்கும் ‘என்கிரிப்ஷன்’ வசதியோடு, நமக்கு வரும் மெசேஜ்களுக்கு தானாக ரிப்ளை(auto reply) செய்யும் ஆல்ஷன்களும் உள்ளன. இதன்மூலம் நாம் ரிப்ளை செய்ய டைப் செய்ய வேண்டிய அவசியம் கூட இருக்காதாம். யாரேனும் ‘ எப்படி இருக்கிறாய்?’ என்று கேட்டால், ‘நன்றாக இருக்கிறேன்’ என்ற பதில் ஒரு ஸ்மைலியோடு ஸ்கிரீனில் சஜெஷனாகக் காட்டும்.

மிக மோசமான சூழ்நிலையில் கூட துல்லியமான வீடியோ காலிங்
செய்ய உதவுவதே டியோ ஆப்பின் மிகப்பெரிய பலம். பிற ஆப்களைப் போல் கால் செய்து சில நேரம் கழித்து லோட் ஆகாமல், உடனுக்குடனேயே கால்கள் இணைக்கப்படுகின்றன. இதனால் வீடியோ காலிங் ஆப்களில் டுவோ ஒரு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரு ஆப்களும் ஆன்டிராய்டு மற்றும் ஐ-ஓஸ் மொபைல் தளங்களில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. வாட்ஸ் அப் மற்றும் ஃபேஸ்புக் அளவிற்கு வெற்றி பெரும் அளவிற்குப் பெரிதாக இந்த ஆப்களில் ஏதுமில்லை என்கிறார்கள் கேட்ஜெட் கில்லாடிகள். 

சூக்கர்பெர்க்கின் ஐடியாவைத் தாண்டி கூகுளால் ஏதேனும் சாதிக்க முடியுமா? பொருத்திருந்து பார்க்கலாம்..


Monday, May 23, 2016

டெஸ்க் டாப் கம்ப்யூட்டர்களுக்கும் வாட்ஸ் அப்

விண்டோஸ் இயக்கத்திற்கான புதிய வாட்ஸ் அப் செயலி ஒன்றை வாட்ஸ் அப் வெளியிட்டுள்ளது. இதன் மூலம், வாட்ஸ் அப் வாடிக்கையாளர்கள், டாகுமெண்ட்களைத் தங்களுக்கிடையே பகிர்ந்து கொள்ளலாம். பி.டி.எப். பைல்களையும் இதன் வழியே அனுப்பலாம். வாட்ஸ் அப் தளத்திற்கு, விண்டோஸ் இயக்கம் ஒரு சிறந்த வழியாகும். ஏற்கனவே, விண்டோஸ் போன் இயக்கத்தில் இந்த வசதி தரப்பட்டிருந்தது. தற்போது, விண்டோஸ் சிஸ்டம் மட்டுமின்றி, மேக் கம்ப்யூட்டர்களிலும் இந்த வசதி தரப்பட்டுள்ளது. இவற்றை https://www.whatsapp.com/download என்கிற இணைய தளத்தில் பெற்றுக் கொள்ளலாம். 

Friday, May 20, 2016

பெங்களூரில் ஆப்பிள் டெவலப்மென்ட் சென்டர்

ஆப்பிள் ஐபோன் விற்பனையை அதிகரிக்க அதன் சிஇஓ டிம் குக் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். இங்கு மும்பையில் உள்ள சித்தி விநாயகர் கோவிலுக்குச் சென்ற அவர் பின்னர் பெங்களூருவில் ஆப்பிள் நிறுவனத்தின் ஆப் டிசைன் மற்றும் டெவலப்மென்ட் சென்டர் ஒன்றை நிறுவப் போவதாகக் கூறியுள்ளார்.

வரும் 2017-ம் வருடத்தின் தொடக்கத்தில் அந்த மையம் தொடங்க இருப்பதாகவும் கூறினார். முக்கியமாக அவர் இந்தியா வருகை தந்ததற்கு காரணமே ஆப்பிள் விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்பதுதான். ஏனெனில் சீனாவில் ஆப்பிள் விற்பனைக் குறைந்துள்ளது.

உலகில் சீனாவிற்கு அடுத்தபடியாக அதிக ஸ்மார்ட் போன் புழக்கம் இந்தியாவில்தான் இருக்கிறது. எனவே ஆப்பிள் தனது சந்தையை விரிவுபடுத்த இந்தியாவைத் தேர்ந்தெடுத்துள்ளது.